இலங்கை மஹரகம – பமுனுவ பிரதேசத்தில் 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்குள்ள இரண்டு ஆடையகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

புத்தாண்டு முடிவடைந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்து காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

 

மேலும், எதிர்வரும் மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானவை என்று இராணுவத்தளபதி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.