மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் விசேட அதிரடி பிரிவின் குழுவொன்று அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒரு கைதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் 2 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.