விஜய்யின் நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் GOAT . the greatest of all time என்ற ஆங்கில தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டைட்டிலுக்கு சில விமர்சனங்கள் எழுந்தது. இருந்தாலும் டைட்டில் வித்யாசமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து இப்படத்தின் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

போஸ்ட்டரை பார்க்கும்போதே இப்படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிப்பதாக தெரிகின்றது. அதிலும் ஒரு கெட்டப் மிகவும் வித்யாசமாகவே உள்ளது. எனவே தான் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது GOAT படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு இம்மாதம் இறுதிக்குள் முடிவடைய இருக்கின்றது. இதைத்தொடர்ந்து மே மாதம் இப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாக வெங்கட் பிரபுவே தெரிவித்திருந்தார். எனவே அப்பாடலுக்காக தான் ரசிகர்கள் தற்போது ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் விஜய் GOAT படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அப்பாடல் தான் மே மாதம் வெளியாக இருப்பதாகவே தெரிகின்றது. இந்நிலையில் GOAT திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன் என பலர் நடித்து வருகின்றனர். மேலும் சினேகா, வைபவ், லைலா, பார்வதி என ஒரு நட்சத்திர பட்டாளங்களே இணைந்து நடித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து ஒரு சில கேமியோ ரோல்களும் GOAT படத்தில் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதைப்பற்றி வெங்கட் பிரபுவிடம் கேட்கப்பட்டது. படத்தில் கேமியோ ரோல்கள் இருக்கின்றதா என வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது, படம் வந்ததும் நீங்களே பாருங்க என கூறியிருக்கின்றார். இந்நிலையில் GOAT படத்தில் கேமியோ ரோல் பற்றி ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

விஜய்யின் GOAT திரைப்படத்தில் த்ரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக விஜய், பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் நடனமாடும் பாடலில் த்ரிஷாவும் சேர்ந்து நடனமாட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.

இருப்பினும் வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே கேமியோ ரோல் கண்டிப்பாக இருக்கும். அதுபோல GOAT படத்திலும் த்ரிஷாவின் கேமியோ ரோல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. எனவே இத்தகவல் உண்மையா இல்லையா என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும்.அதுவரை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் ஆகவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.