திங்கட்கிழமை பிற்பகல் Bucklands கடற்கரையில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் கொள்ளையடித்த இரண்டு பேரை பொலிஸார் சிறிது நேரத்திலேயே கைது செய்தனர்.

மதியம் 3 மணிக்குப் பிறகு மூன்று குற்றவாளிகள் குறித்த வணிக நிலையத்திற்குள் நுழைந்ததாக Counties Manukau கிழக்குப் பகுதி தடுப்பு மேலாளர் இன்ஸ்பெக்டர் ரகானா குக் கூறினார்.

குற்றவாளிகளில் ஒருவர் கவுண்டர் மீது குதித்து, பணப்பெட்டியைத் திருடியதை அடுத்து மூவரும் தப்பி ஓடிவிட்டனர், என்றார்.

அதிர்ஷ்டவசமாக சம்பவத்தின் போது யாரும் காயமடையவில்லை, மேலும் உள்ளே இருந்த தொழிலாளிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றாலும், இந்த சம்பவம் அவர்களை அதிர்ச்சியடைய செய்ததாக இன்ஸ்பெக்டர் குக் கூறினார்.

குற்றவாளிகள் எனக் கூறப்படும் நபர்களின் நடமாட்டத்தைப் பார்த்து 111 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டதை அடுத்து அதிகாரிகள் இரண்டு ஆண்களை காவலில் எடுத்தனர், மேலும் முகவரியில் இருந்து பணப்பெட்டியையும் மீட்டெடுக்க முடிந்தது என அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் அழைப்பின் மூலம் இந்த விஷயத்தை விரைவாக முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என்று குக் கூறினார்.

20 மற்றும் 19 வயதுடைய இருவர், திருட்டு குற்றச்சாட்டில் மார்ச் 19 அன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்படுகிறது.

மூன்றாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க காவல்துறை விசாரணையைப் பின்பற்றுகிறது என்று குக் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்