விஜய் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் the greatest of all time என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

சென்னையில் படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு தற்போது வெளிநாட்டிற்கு பறந்துள்ளது. அநேகமாக இம்மாதம் இறுதியில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும், அதன் பிறகு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக துவங்கும் என்றும் தெரிகின்றது.

சமீபத்தில் வெங்கட் பிரபு பேசுகையில், இப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வருவதாக தெரிவித்தார். தொழில்நுட்ப ரீதியில் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. இந்நிலையில் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா என பலர் நடித்து வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் படத்தில் சர்ப்ரைஸான கேமியோவும் இருக்கும் என்றே எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகின்றது. மேலும் மே மாதம் GOAT படத்தின் முதல் பாடலும் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியிருக்கின்றார். இந்நிலையில் தற்போது இப்படத்தை பற்றி வெளியான ஒரு தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கின்றது. குறிப்பாக கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்களை இந்த செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

என்னவென்றால் விஜய்யின் GOAT படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருக்கின்றதாம். GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை கேரளாவில் படமாக முடிவெடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இதன் மூலம் 12 வருடங்களுக்கு பிறகு விஜய் படப்பிடிப்பிற்காக கேரளா செல்ல இருக்கின்றார்.

கடைசியாக விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் தான் கேரளாவில் படமாக்கப்பட்டது. அதன் பிறகு 12 வருடங்கள் கழித்து GOAT படப்பிடிப்பிற்காக கேரளா செல்ல இருக்கின்றார் விஜய். இத்தகவல் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டை போல கேரளாவிலும் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எனவே கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் தங்கள் ஊரில் விஜய்யின் படப்பிடிப்பு நடிப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.