இலங்கையில் நடைபெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அவரது மகளின் மறைவு காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா அவர்களின் புதல்வி பவதாரிணி அவர்களின் திடீர் மரணம் எல்லோருக்கும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி
இருக்கும்.

துரதிஷ்டவசமான இந்த இழப்பின் காரணாமாக ஜனவரி 27 மற்றும் 28ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்
நடைபெறவிருந்த இசைஞானி இளையராஜா அவர்களின் "என்றும் ராஜா ராஜாதான்" இசை நிகழ்ச்சி, தவிர்க்க முடியாத வகையில்
பிற்போடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டிருந்த நிலையில் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறவிருந்த இசைஞானி இளையராஜா உட்பட பாடகர்கள் கலைஞர்கள் அனைவரும் தமிழ் நாட்டில் இருந்து கொழும்புக்கு வருகை தந்திருந்த நிலையிலும் நிகழ்ச்சி பிற்போடப்பட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை உணர்க்கிறோம்.

இந்த நிகழ்வுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் அதே நிகழ்வுக்கான புதிய திகதிகளை மிகவிரைவில் அறியத்தருவோம். மேலும், ஏற்கனவே ஒழுங்கு படுத்திய நிகழ்வுக்கான டிக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள், அதே டிக்கெட்டுக்களை புதிய திகதிகளிலும் பயன் படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

தவிர்க்க முடியாத நிலையில் நிகழ்ச்சி பிற்போடப்பட்டதால் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக மனம் வருந்துகிறோம்.
மேலதிக விபரங்களுக்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளவும்.

LION A பிரபா - +94 77 741 7068
KT பிரசாத் - +94 77 963 8565
ரத்னம் பாஸ்கர் - +94 77 224 3148

தகவல்: KT பிரசாத்