தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் TNPL போட்டியின் இரண்டாவது தகுதிச்சுற்று இன்று இரவு 7.15 மணியளவில் திருநெல்வேலி சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் போட்டியிட உள்ளன. இதில் வெற்றிபெறும் அணியானது இரண்டாம் அணியாக இறுதிச்சுற்றிற்கு செல்லும் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் போட்டியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரைக் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுகான முதலாவது அணியாக தேர்வு செய்யப்பட்ட லைகா கோவை கிங்ஸ் அணியுடன் வரும் 12ஆம் திகதி திருநெல்வேலியில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.