உலக சுகாதார ஸ்தாபனத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ,கோவக்ஸ் திட்டத்தின் கீழ் 1.44 மில்லியன் டோஸ் தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ள நிலையில் அதில் முதல் தொகுதியான 264,000 டோஸ் தடுப்பூசிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைக்கு வருகிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.