வரும் மே மாதத்திற்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அவர், அதற்காக, புதிதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசியை, போர்க்கால அடிப்படையில், விரைவாக தயாரிப்பதற்பான சட்டத்தை பிறப்பித்துள்ளதாகவும் கூறினார்.

ஏற்கனவே அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனத்திடம் 30 கோடி தடுப்பூசிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ஜான்சன்&ஜான்சன் தடுப்பூசிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.