தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன் என்றும் எழுந்து கூட நடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பேட்டிகளில் கூறியிருந்தார்.

அப்படியொரு கஷ்டத்தில் இருக்கும் போது கூட யசோதா, குஷி, சகுந்தலம் போன்ற படங்களில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.

இந்நிலையில் சமந்தா, தேவ் மோகன் நடிப்பில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதி வெளியாகவுள்ள சகுந்தலம் படத்தில் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சமந்தா.

சமந்தாவை பற்றி பலர் பேசியபோது கண்ணீருவிட்டு அழுதுள்ளார் சமந்தா.

பின் சமந்தா மேடையில் பேசுகையில்...

இத்தருணத்திற்காகத்தான் காத்திருந்தேன். எதிர்ப்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பம்.

சில சமங்களில் ஒருசில மாயம் நடக்கும், அப்படித்தான் சகுந்தலம் படத்திற்கும் நடந்துள்ளது.

எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார் நடிகை சமந்தா.