கணவர் மரணத்திற்கு பிறகு தனது கவனத்தை திசை திருப்ப படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை மீனா.

இந்நிலையில் நடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

கணவரை இழந்து மகளுடன் தனியாக வசித்து வரும் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக‌ ஆனால் இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லாத மீனா, குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்தால் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

மேலும் நீண்ட கால குடும்ப நண்பரைதான் மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து பரவும் தகவல் குறித்து நடிகை மீனா விளக்கம் அளித்துள்ளார்.

அதில் தன்னுடைய கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே இன்னும் தன்னால் மீண்டு வர முடியவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தனது கணவரோடு அவர் வாழ்ந்த நினைவுகளுடனே நாட்களை கழித்து வருவதாகவும் இந்த மாதிரியான சூழ்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து தன்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறியுள்ளார் மீனா.

மேலும் அதற்குள் இரண்டாம் திருமணம் குறித்து பேசி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றும் தான் தற்போது நடிப்பிலும் கதைகளை தேர்வு செய்வதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

தன்னை பற்றி பரவும் அந்த தகவல்கள் முழுக்க முழுக்க வதந்திதான் என தெரிவித்துள்ளார் மீனா.

தனது கணவர் வித்யா சாகர் மறைந்த போது நடிகை மீனாதான் அவருக்கு அனைத்து இறுதிச் சடங்குகளையும் செய்தார். தனது கணவர் மறைவுக்கு பிறகு தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.