தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா தான் எதிர்கொண்ட கசப்பான பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில்...

சமூகத்தில் நிறைய பெண்களுக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடக்கின்றன. சில சமயங்களில் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறேன். தெருவில் நடந்து போகும்போது யாரோ பின்னால் வந்து என்னை தட்டி விட்டு செல்வார்கள், சில நேரம் எல்லை மீறுவார்கள்.

கலைநிகழ்ச்சிகளிலும் இவை நடக்கும். நாம் அதை உணர்வதற்குள் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள் என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்...

எனக்கு 11 வயது இருக்கும்போது நான் என் அப்பாவுடன் பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.

அப்போது நான் டீ ஷர்ட் அணிந்திருந்தேன். என் பின்னால் யாரோ என் மீது கை வைத்து தடவினார்கள். அந்த சமயத்தில் அதை மிகவும் அசிங்கமானதாக எதிர்கொண்டு சங்கடப்பட்டேன் என கூறி ஆதங்கத்தை கொட்டினார்.

ஆண்கள் இப்படிதான் நடந்து கொள்வார்களா? என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்கும்போதுதான் பதறுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டித்தால் எல்லை மீறல்கள் இருக்காது" என்றார்.

மேலும் இந்த மாதிரி அத்துமீறல்கள் பற்றித்தான் நான் நடித்துள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படம் பேசியிருக்கிறது என ஆண்ட்ரியா கூறினார்.