கட்டங்கட்டமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஏனைய தரங்களை ஆரம்பிப்பது குறித்து இந்த வார இறுதியில் தீர்மானம் ஒன்று எட்டப்படும் என கல்வியமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அது தொடர்பில் பிரதேச இணைப்பு குழுவைக் கூட்டி திறக்கக்கூடிய ஏனைய தரங்கள் குறித்து தீர்மானிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ,மேல் மாகாணத்தில் தற்போது கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்காக மாத்திரம் கற்றல் செயல்பாடுகள் இடம்பெறுகின்றன.