நெல்சனை சேர்ந்த வாலிபரான லேக் தகிமோனாவின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள மூன்று ஆண்கள் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

22 வயதான Takimoana, பிப்ரவரியில் வாஷிங்டன் ரோடு பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவசர சேவைகள் வீட்டிற்கு அழைக்கப்பட்டு CPR வழங்கப்பட்டபோதிலும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை.

இதனையடுத்து 30 வயதான துகோதாஹி கிங் மற்றும் 24 வயதான ட்ரெமெய்ன் டர்ஃப்ரே-ரோஸ் என்ற இரு நபர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் இருவரும் இன்று நெல்சன் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் தாங்கள் குற்றமற்றவர்கள் என மனு தாக்கல் செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கு வரும் ஜூலை மாதம் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் திருட்டு குற்றம் சாட்டப்பட்ட ஆலன் நார்மன் என்ற 31 வயதான மூன்றாவது நபர் தான் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.