கோரமண்டலில் (Coromandel) இன்று பிற்பகல் 43 வயதுடைய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து கொலை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

துப்பறியும் இன்ஸ்பெக்டர் கிரஹாம் பிட்கெத்லி ஒரு அறிக்கையில், மதியம் 12:30 மணியளவில் Manaia வில் உள்ள ஒரு கிராமப்புற குடியிருப்பு வீட்டிற்கு பொலிஸார் சென்று ஒருவர் இறந்து கிடந்ததையும் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் இருந்ததையும் கண்டதாக கூறினார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றார்.

என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த காட்சி பரிசோதனை பல நாட்கள் நீடிக்கும் என்று பிட்கெத்லி கூறினார்.