சூதாட்ட இயந்திரங்களில் பணம் வென்ற வயதான பெண்கள் இருவரை பின்தொடர்ந்து, தாக்கி கொள்ளையடித்த 32 வயதான ஹேஸ்டிங்ஸ் (Hastings) நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை மதியம் குறித்த பெண்களிடம் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சூதாட்ட இயந்திரங்களில் பணம் வென்றதால், பெண்கள் ஆணின் கவனத்தை ஈர்த்திருக்கலாம் என பொலங கருதுகின்றனர்.

பின்னர் அவர் ஹேஸ்டிங்ஸில் இருந்து தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களின் உடமைகளையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

துப்பறியும் சார்ஜென்ட் பில் சேயர்ஸ், இது ஒரு சந்தர்ப்பவாதக் குற்றமாகத் தோன்றுவதாக கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட குறித்த குற்றவாளி கொள்ளை மற்றும் பிற குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஹேஸ்டிங்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.