ஜனவரி மாதம் முதல் Raglan விமான தரையிறக்க பகுதியில் கூடியிருந்த எதிர்ப்பாளர்கள் குழு இன்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எவ்வித அத்துமீறல் நோட்டீஸ்களும் வழங்கப்படவில்லை மற்றும் கைதுகள் இடம்பெறவில்லை என வைகாடோவின் மேற்கு பகுதி கமாண்டர் இன்ஸ்பெக்டர் வில் லௌரின் தெரிவித்தார்.

"கடந்த சில வாரங்களாகப் போராட்டக் குழுவுடன் காவல் துறையினர் தொடர்ந்து தொடர்பு கொண்டு, அவர்களுடன் அமைதியான தீர்வை பெற நோக்கிச் செயல்பட்டு வந்தனர்."

இந்நிலையில் குறித்த ஆக்கிரமிப்பு குறிப்பிடத்தக்க சிக்கல்கள் ஏதுமின்றி தீர்க்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக லௌரின் கூறினார்.