Northland இன் Kaikohe வில் இடம்பெற்ற தொடர்ச்சியான கும்பல் தொடர்பான வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 15 முதல் 55 வயதுக்குட்பட்ட ஆண் கும்பல் உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகள் என்று காவல்துறை கூறுகிறது.
அவர்கள் தற்போது Kaikohe மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் ஆஜராகி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த பகுதியில் நடந்த நான்கு வன்முறை சம்பவங்கள் குறித்து Northland பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவை அனைத்தும் கில்லர் பீஸ் மற்றும் பழங்குடியினர் கும்பலைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டவை என்று பொலிஸார் கூறுகிறார்கள்.
இவற்றில் மூன்று சம்பவங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை அன்று இரு கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களைத் தவிர, 41 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் கிட்டத்தட்ட 1500 டொலர்கள் ரொக்கத்தை பொலிஸார் இதனிடையே கைப்பற்றினர்.
துப்பறியும் மூத்த சார்ஜென்ட் மார்க் டால்செல் கூறுகையில்,
இந்த சம்பவங்கள் தற்செயலானவை அல்ல பொலிஸார் இந்த சம்பவங்களை "மிகவும் தீவிரமாக" விசாரித்து வருவதாகவும் மேலும் கைதுகள் அல்லது குற்றச்சாட்டுகள் இடம்பெறலாம் என்றும் அவர் கூறினார்.
"வன்முறைக்கு சமூகத்தில் இடமில்லை, அதனை பொறுத்துக்கொள்ள முடியாது" என்று டால்செல் கூறினார்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து Kaikohe பகுதியில் பொலிசார் பார்வையிடல் மற்றும் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர்.