மத்திய நெல்சனில் கார் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து விபத்துக்கான சாட்சிகளை பொலிஸார் முறையிடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நெல்சனில் உள்ள Rutherford தெருவில் உள்ள மரத்தில் மோதியதில் ஸ்டோக்கைச் சேர்ந்த டைலிர் சைஜ் அயர்டன் என்ற குறித்த 17‌ வயது இளைஞன் உயிரிழந்தார்.

பெண்களுக்கான நெல்சன் கல்லூரிக்கு வெளியே Waimea Rd மற்றும் Rutherford St சந்திப்பில் உள்ள மரத்தில் கார் மோதியது.

விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் விசாரணையின் ஒரு பகுதியாக, Tukuka தெரு மற்றும் Rutherford தெரு சந்திப்பிற்கு இடையே Waimea சாலையில் அதிகாலை 1.35 மணியளவில்  வாகனங்கள் பயணிப்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் அல்லது டாஷ் கேம் காட்சிகள் உள்ள எவரிடமிருந்தும் பொலிஸார் தகவல்களை பெற விரும்புகிறார்கள்.

குறித்த விபத்தில் காரில் இருந்த இரண்டு பயணிகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.