ஜனவரி தொடக்கத்தில்  கேன்டர்பரி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த எச்சங்கள் லூயிஸ் ஜார்ட் ராபர்ட்சன் என்ற 37 வயது நபருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் துப்பறியும் சார்ஜென்ட் டான் இஷர்வுட், இந்த மரணம் தொடர்பில் குறிப்பிடத்தக்க விசாரணைப் பணிகளை நார்த் கேன்டர்பரி CIB மேற்கொண்ட நிலையில் குறித்த மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 6 ஆம் திகதி லீத்ஃபீல்ட் கடற்கரையில் ராபர்ட்சனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த மரணம் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.