இன்று அதிகாலை மத்திய கிறிஸ்ட்சர்ச்சில் திருடப்பட்ட  கார் ஒன்று மற்றொரு காரின் மீது மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலை 1 மணியளவில் ரங்கியோராவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கார் திருடப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பின் குறித்த கார் பீலி அவென்யூ (Bealey Avenue) மற்றும் மான்செஸ்டர் தெரு (Manchester Street) சந்திப்பில் மின் கம்பம் மற்றும் மற்றொரு கார் மீது மோதியதில் மூன்று பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.