ரக்லானில் நிறுத்தப்பட்டிருந்த காரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் ஒரு கொலையாக கருதப்படுகிறது.

ஒரு அறிக்கையில், உள்ளூர்வாசிகள் ஜனவரி 26  அன்று நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஜேட் புய்-ரகேனா என்றும் அழைக்கப்படும் 42 வயதான நபரை கண்டுபிடித்தனர்.

குறித்த நபர் ஆக்லாந்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் கடலோர நகரத்தில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளை நிற மிட்சுபிஷி லெக்னம் கார் அல்லது அந்த நேரத்தில் அப்பகுதியில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் துப்பறியும் இன்ஸ்பெக்டர் கிரஹாம் பிட்கெத்லி ஏற்கனவே தகவல்களுடன் முன் வந்த ரக்லான் குடியிருப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நபரின் மரணத்திற்கு வழிவகுத்த சூழ்நிலையை நிறுவ முயல்வதால் பொலிஸார் நகரத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.