கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேராளாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே,கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கு விசாரணைகள் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என்று அறிவித்து கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.