அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று அடுக்குமாடிகள் கொண்ட அந்த குடியிருப்பில் இரண்டாவது மாடியில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு துறையினர் 50 நிமிட போராட்டங்களுக்கு பிறகு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

குறித்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள தீ எச்சரிக்கை கருவிகள் வேலை செய்யவில்லை என அங்கு தங்கியிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.