உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில்  காவல் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்புடன் செயற்பட்டு வருகிறது.

இந் நிலையில் நாய்களை வைத்து கொரோனாத் தொற்றை கண்டுபிடிக்க உள்துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டது.

இதில் சார்ஜா பகுதியிலும் கொரோனா தொற்றை பொது இடங்களில் கண்டுபிடிக்க கே9 மோப்ப நாய்கள் பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சார்ஜா  காவல் துறையில்  80 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் செய்யப்படும் சோதனைகளில் 92 சதவீதம் துல்லியமான முடிவுகள் பெறப்பட்டுள்ளது.