உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல சதி திட்டம் தீட்டியதற்காக உளவுப்பிரிவில் கர்னல் பதவி வகித்து வந்த இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல உண்மைகளை அவர்கள் கக்கியுள்ளனர். அவற்றின் விவரம் வருமாறு,

உக்ரைன் அரசாங்கத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுப்பிரிவில் பணியாற்றி வந்த தளபதிகள் 2 பேரும் ரஷ்யாவின் உளவுத்துறையினருக்கு துப்பு சொல்லி வந்துள்ளனர். 

இதற்காக பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதன்மூலம் உக்ரைனின் இரகசிய நடவடிக்கைகள், ராணுவ தாக்குதல்கள் குறித்தான தகவல்கள் ஆகியவற்றை கசிய விட்டுள்ளனர். 

ஒருகட்டத்தில் அவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொன்று விடுமாறு ரஷ்யா சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக பலகோடி பணம், ரஷ்யா நாட்டு குடியுரிமை, பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புக்கொண்ட பின்னர் ரஷ்யாவில் இருந்து உயர்தர தொழில்நுட்பத்துடன் கூடிய 2 ஆளில்லா விமானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு அதிபரை படுகொலை செய்வதற்காக திட்டமும் வகுத்து தரப்பட்டுள்ளது.

இது குறித்தான தகவல்களை உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில் இருவர் மீதும் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டு மேல் விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறியுள்ளனர்.