மாத்தறை, வெலிகம, வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (30) இரவு இடம்பெற்ற இந்தத் தீ விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தால் வீட்டின் மேற் கூரை எரிந்து சேதமாகியுள்ளது.

வீட்டின் அறையில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியின் பாட்டியும், 13 வயது சகோதரியும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டவுடன் வெலிகம பொலிஸார் தீயை அணைக்க மாத்தறை தீயணைப்பு வாகனங்களை வரவழைத்துள்ளதாகவும் தீ விபத் துக்கான காரணம் இதுவரையில் தெரிய வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.