பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் இன்று காலை 5.13 மணிக்கு சக்திவாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.

இப் பூகம்பமானது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப் பூகம்பத்தில் பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இப் பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் இது வரை வெளியாகவில்லை