​மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.