கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சையும், 5 ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.