வவுனியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை (21) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப் பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்

இதன்படி ,வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்கு உட்பட்ட 5 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

மேலும் ,இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாளை முதல் பாடசாலைகளைத் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.