அமெரிக்க எரிசக்தி திணைக்களம் பாரிய சைபர் தாக்குதலொன்றை சந்தித்துள்ளது.அமெரிக்க எரிசக்தி திணைக்களம் இதனை உறுதிசெய்துள்ளது.அமெரிக்காவின் அணுவாயுதங்களிற்கு பொறுப்பான எரிசக்தி திணைக்களம் சைபர் தாக்குதலிற்குள்ளானமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைபர் தாக்குதலை தொடர்ந்து பதில் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள  எரிசக்தி திணைக்களம் வர்த்தக வலையமைப்புகள் மாத்திரம் இலக்குவைக்கப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய அணுபாதுகாப்பு நிர்வாகத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்களை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.மைக்ரோசொவ்ட் தான் இலக்குவைக்கப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.அமெரிக்கா வர்த்தக திணைக்களமும் சைபர் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது.ரஸ்யாவே இதற்கு காரணம் என சந்தேகம் காணப்படுகின்றது