மேல் மாகாணம் மற்றும் முடக்கப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில், மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைளுக்காக பாடசாலைகள் இன்று(23) திறக்கப்படவுள்ளன.

 

இதற்கமைய, உச்சபட்ச சுகாதார வழிமுறைகளை கையாள வேண்டுமென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன், பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

 

தனிமைப்படுத்தல் சுகாதார வழிமுறைகளை சகல சாரதிகளும் பின்பற்ற வேண்டுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.