துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

துருக்கியில் பாலிகேசிர் மாகாண நெடுஞ்சாலையில் பயணிகளுடன் பஸ் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரச் சரிவில் உருண்டு விழுந்தது.

இந்நிலையில் சம்பவ இடத்திலேயே 11 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி 4 பேரும் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 17  பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.