பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயோர்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை இராஜினாமா செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றும் 11 பெண்கள் புகார் கூறியதைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையின் முடிவில் ஆண்ட்ரூ கியூமோ மீது கூறப்பட்ட புகார்கள் உண்மை என்பது தெரியவந்தது.