இலங்கை உட்பட ஆறு ஆசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கொள்கையைப் புதுப்பித்துள்ள கட்டார் அவர்களுக்காக கட்டாய தனிமைப்படுத்தலை அமைத்துள்ளது.

இன்று முதல் இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷில் இருந்து கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அல்லது நோய் தொற்றிலிருந்து மீட்கப்பட்டவர்கள் இரண்டு நாள் தனிமைப்படுத்தலுக்குச் செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.