லண்டனில் கேம்டன் டவுன் (Camden Town) சுரங்க ரயில் நிலையத்தில்,கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென மற்ற பயணிகளின் முன்னிலையில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டுள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக லண்டன் பெருநகர பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மருத்துவமனையில் அந்த நபரின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபர் மனநலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#fpy #foryourpage #london #ctvtamil