கென்யா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள சியா நகரில் இருந்து நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்றபோது மாலங்கா என்ற நகருக்கு அருகே திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பெட்ரோல் லாரி எதிர்திசையில் பால் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் 2 லாரிகளும் சாலையில் கவிழ்ந்தன.

இந்நிலையில் உள்ளூரைச் சேர்ந்த மக்கள் பெட்ரோலை சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.இதனிடையே சற்றும் எதிர்பாராத வகையில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியதுடன் மேலும் 31 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.