பிரான்சில் மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாரா மாகாணத்தில் பகாஜா என்ற நகரில் மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 10இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மின்கோபுரம் திடீரென சரிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.

இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கோபுரம் சரிந்து விழுந்தது எப்படி என்பது பற்றிய விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.