77 வயதான ஒரு பெண் Redlynch இல் உள்ள அவரது வீட்டில் தாக்கப்பட்டதன் பின்னர் இரண்டு சிறுவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

4 சிறுவர்கள கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், அவரது காரின் சாவியைக் கோரியதுடன் குறித்த பெண்ணின் காரை ஓட்டிச் சென்றுள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் அந்த பெண்ணின் காரை எஸ்ப்ளேனேடில் கண்டுபிடித்து, இன்று அதிகாலை 3 மணியளவில் மூன்று சிறுமிகளையும் ஒரு சிறுவனையும் கைது செய்தனர்.

13 வயது சிறுவன் மற்றும் 15 வயது சிறுமி மீது உடல் ரீதியான தீங்கு விளைவிக்கும் தாக்குதல், 60 வயதுக்கு மேற்பட்ட நபரை கடுமையாக தாக்கியது, ஆயுதக் கொள்ளை மற்றும் மோட்டார் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் 13 வயது சிறுவனுக்கு போலீஸ் ஜாமீன் மறுக்கப்பட்டது, 15 வயது சிறுமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இவர்கள் இருவரும் கெய்ர்ன்ஸ் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் ஏனைய 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தாக்குதலில் அந்த வயதான பெண்ணின் கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.