போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 23 பெண் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேற்படி சிறைச்சாலையில் கந்தகாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட 663 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம் 23 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.