குருநாகல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் நால்வர் சிறையை உடைத்து தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள்,நீதிமன்ற அமர்வொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே தப்பிச் சென்றுள்ளனர்.