கம்பளை கொஸ்கம பிரதேசத்தில் தான நிகழ்வுக்குச் சென்ற தேரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால்,மூன்று விஹாரைகள் மூடப்பட்டுள்ளன.

 

கடந்த 19 ஆம் திகதி ஆத்ம சாந்தி கிரியைகள் நடைபெற்று தானம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு அத்துகொட, ஹெரகொல்ல, அலாகம ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள விஹாரைகளின் தேரர்களுக்கு கலந்து கொண்டுள்ளனர்.இவர்களில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டு 12 நாட்களின் பின்னரே, கங்கஹியல கோரல பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார அதிகாரிகள்,கடந்த 2 ஆம் திகதி சென்று அவர்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.