இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 பேர் காயமடைந்துள்ளதுடன்,3 பேர் காணாமல் போயுள்ளார்.

கடும் மழையுடனான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு சொந்தமான, 88 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

67564 குடும்பங்களைச் சேர்ந்த, 2 லட்சத்து 70 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ,இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.