இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைவதன் காரணமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதை தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..