பாலூட்டும் தாய்மார்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தகுதியுடையவர்கள் என, தொற்று நோய் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியை ஏற்றுவது குறித்து, சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கர்ப்பிணிகளுக்கும் கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது குறித்து இதுவரை முழுமையான பரிந்துரைகள் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள அவர், இதுவரை கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பான எவ்வித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.