முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 12 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் யாழ் மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.

தற்போதய கொரோனா சுகாதார விதி முறைகளுக்கு அமைவாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பிரதி முதல்வர் து. ஈசன் உட்பட பல மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.