கொட்டாவ, கடுவளை மற்றும் அத்துருகிரிய வழியாக தெற்கு அதிவேக வீதிக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கடமையாற்றும் ஊழியர்களை அந்த பணிகளிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த இடங்களில் கடமையாற்றும் சில ஊழியர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெற்கு அதிவேக வீதியின் வீதி நடவடிக்கை பிரிவின் பதில் பணிப்பாளர் தெரிவித்தார்.