வடக்கில் வவுனியாவில் உள்ள மருத்துவ சேவையாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களிற்கு இரண்டாம் கட்ட கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட கொவிட் -19 , " கோவிஷெல்ட் " தடுப்பூசிகள் வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் மருத்துவர்கள் , தாதியர்கள் , மருத்துவ சேவையாளர்கள் , பொதுச்சுகாதார பரிசோதகர்களிற்கு ஏற்றும் பணி கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ சேவையாளர்களிற்கு இரண்டாவது டோஸ் ஏற்றும் செயற்பாடுகள் இன்று இடம்பெற்றது .