பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும்  அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்ட விரோதமானது என குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

 

ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் ரியாஜ் பதியுதீனின் மனைவி ஆகியோர் சட்டத்தரணி ஆர்ணல்ட் பிரியந்தன் ஊடாக இந்த முறைப்பாட்டை முன் வைத்துள்ளனர்.